Monday, January 1, 2007

5.தமிழீழத்தின் முதலாவது அடையாளப் அட்டையை தேசியத் தலைவர் பெற்றுக்கொண்டார்.


முதலாவது தேசிய அடையாள அட்டையை தமிழீழத் தேசியத் தலைவர் இன்று
பெற்றுக்கொண்டார்.


2007ம் ஆண்டு சனவரி முதலாம் நாள் தமிழீழ தேசிய அடையாள அட்டை
வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்
அவர்கள் முதலாவது தமிழீழத் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டார்.

Tamilwin.com


தமிழீழ ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் சி.ஜெயச்சந்திரன் அவர்களால் தமிழீழத்
தேசியத் தலைவருக்கு முதலாவது தேசிய அடையாள அட்டை இன்று
வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழீழ ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர்
ஜெயச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்:

தமிழீழ சிவில் நிர்வாக பிரிவு
வடக்கு கிழக்கில் உள்ள மக்களை தமிழீழ தேசிய பதிவேட்டில் பதியும் நடவடிக்கையை ஜனவரி
முதலாம் திகதி முதல் ஆரம்பித்துள்ளன. இதன் முதலாவது பதிவாக தமிழீழ தேசிய தலைவர்
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளார். ஒவ்வொரு பிரயையின்
பதிவும் கணணிமயப்படுத்தி தமிழீழ நிர்வாக நடவடிக்கை வலிமைப்படுத்தப்படும் என அவர்
மேலும் தெரிவித்துள்ளார்


No comments: