Monday, January 8, 2007

8.கவிஞர் சு.வில்வரத்தினத்துக்கு விடுதலைப் புலிகள் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கெளரவம்


தமிழீழ விடுலைப் போராட்டத்திற்கு பங்களிப்பை செய்த படைப்பாளர், கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களுக்கு தமிழீழ விடுலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

யாழ். புங்குடுதீவில் பிறந்த இவர் சிறுவயதிலே சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளின் வடுக்களை மனதில் சுமந்து அதனை எதிர்க்கும் மனோபவம் கொண்டவராக கவிதைகளுடாக தன் உள்மனக்கிடக்கைகளை வெளிக்கொண்டு வரத் தொடங்கியவர் சு.வில்வரத்தினம்.

தாயகத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளால் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், திருகோணமலையில் இடம்பெற்ற சிங்கள அரசின் அடாவடித்தனங்களிற்கு எதிராக குரல்கொடுத்து முழுமுனைப்புடன் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியவர்.

அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் சு.வில்வரத்தினம் அவர்களின் தமிழீழத் தேசியப்பற்றை கௌரவிக்கும் முகமாக நாட்டுப்பற்றாளர் கெளரவிப்பை வழங்கியுள்ளோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: